Share this

Wednesday, 2 May 2018

எனது
புத்தகங்கள்
வெறும்
உடல்தான்.
உன் கண்கள்தாம்
அவைகளின்
உயிர்.

முழுதும் சேர்க்க ஆசைப்பட்ட சிறுவர்களின் உண்டியலை நிரம்புவதற்கு முன் உடைக்கும் போது,சிதறுவது சில்லறை மட்டும் இல்லை,
சின்னஞ்சிறு இதயமும் தான்...

நினைவில் காடுள்ள
மனிதர்களின் காலத்திலிருந்து
வந்துவிட்டோம்
நினைவில் கேடுள்ள
மனிதர்களின்
காலத்திற்கு.

உலகில் ரசிக்க ஆயிரம் படைத்த அந்த கடவுள்

என்னையும் படைத்தது

ஏன் உன் பின்னால் மட்டும் சுற்ற விட்டான்...!

Tuesday, 1 May 2018

விலகல்

🌹🌹🌹
வேண்டாதவனாய்!
விலக்கிவிட்டாய்,
வலிக்கவில்லை...
உன் வேண்டுதலும்,
அதுவாகையால்....
🌹🌹🌹

உறவு

🌹🌹🌹
எனக்கான!
சிறிய உலகத்தில் - நான்,
அமைத்துக்கொண்ட!
மிகப்பெரிய உறவு நீ....
🌹🌹🌹

காதல்

💔💔💔💔
மறந்தது கூட வலிக்கவில்லை!
மறக்க நினைத்தாயே!
வலிக்கிறது...
💔💔💔💔

கதரல்

💔💔💔
உன் விழிகள் ஒருநாள்!
என் தேகம் காணும்,
வலி நிறைந்த அழுகைச்சத்தம்!
உன்செவிகள் நாடும்,
அன்று நீ அறிவதற்கு,
எதுவுமிருக்காது!
அநாதை என்ற முத்திரையோடு,
என் யாக்கை எரிக்கப்படும்...
💔💔💔

Monday, 30 April 2018

காதல்

உன் மௌனம் நான் மட்டுமே வாசிக்கும் கவிதை...!
    என் மொழிகள்
அனைத்தும் கவிதைகளாய்
  உன் காலடியில்...!
       அன்புடன்
Thiru Tks

Saturday, 28 April 2018

புன்னகை

கனவு

கனவு

வண்ணத்து பூச்சியாய் என் கனவுகள்...
அதை ஓடி வந்து பிடிக்கையில் பறந்துவிடுகிறது...
நானும் அதை விடுவதாய் இல்லை...
ஓடிக்கொண்டே இருகிறேன்...
ஏமாற்றத்தை பழகிக்கொண்டு...😪😪😪

Thursday, 26 April 2018

உணர்வு

உணர்வுகள் சுவாரஷ்யமானது...!
சில சமயம்
கோபத்தில்
சிதறும்...!
பல சமயம்
புன்னகையில் மலரும்...!

நினைவுகள் சுகமானது
அது வந்து போகும்
நிமிடங்கள்
மட்டும்
சுவாரஷ்யமானது...!

காதல் கவிதைகள்

அன்பு மனம் அள்ளி வீச
ஆசை  அலை
ஆடி வர
துன்பங்களை
நுறை சிந்த
துயர நிலை
சரிந்ததடா...!

நினைவு

உன்
நினைவுகள்
என்னில்
பூத்திருக்க
உன்
அன்பிற்காய்
ஏங்கி
தினம்
தினம்
நான்
காத்திருக்க
எப்பொழுது
விடியும்
என்
இரவு...
T.s.அரசு

கல்லில்
செதுக்கிய
சிலையை
விட,
கருவில்
சுமந்த
தாயே
தெய்வம்...

காதல் கவிதை

நேசிக்கும்
உள்ளத்தை
பார்க்க
நினைத்தால்
ஏற்க
மறுக்கின்றாள்
என்
அன்பு
தோழி...!
புரிந்துகொள்
காதல்
வேறு...!
நட்பு
வேறு...!

அன்புடன்

T.s...அரசு

Thursday, 12 April 2018

முதன்முதலில் கண்ட தைரியமான பெண்தானா
வெண்மையின் துருவமாய்
பெண்மையின் உருவமாய்
அழகின் சொரூபமாய்
நிலவின் ஒளியாய்
கலையின் மகள் அல்லவா
முதல் முறை பார்த்ததும் ஏன் ஈர்க்கவில்லை
பல முறை காணாத அவள் முகம்
கண்டும் காணாத அவள் குணம்
காண துடித்த என் மனம்
அவளும் சீண்டவே செய்தாள்
ஏணி வைத்தாலும் எட்டமுடியாத அவள் அழகு
காலத்திற்கேற்ப ஒரு மேல்படிப்பு
கானல் நீராக நான்

என்னை நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்
எத்தனை முறை உன்னிடம் காதலை சொன்னாலும்
மௌனமாய்த்தான் இருக்கிறாய் !
இது எத்தனையாவது முறை உன்னிடம் காதல்
சொல்வது என எண்ணிக்கையை கேட்டால்
சரியாக சொல்கிறாய் !
புரிகிறது
என்னையும்
என் காதலையும்
நீ "எண்ணிக்கொண்டிருப்பது "

காதல் பயணம்

உணர்வுக்கு உயிர்
கொடுத்து
இதயத்தை
கொடுப்பதே
காதல்...